காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பாலமுனை அலிகார் மகா வித்தியலாயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா வைபவம் இன்று(7.12.2010) மாலை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஆர்.ஏ.ஜவாட் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளர் யு.எல்.செயினுதீன், ஆரம்பக்கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் இப்றாகீம் உட்பட கல்வி அதிகாரிகள் பிரமுகர்கள் பாடசால ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்பாடசாலையில் பல் வேறு துறைகளில் சிறந்த மாணவர்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் அசிரியர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.
Filed under: காத்தான்குடி செய்திகள்