காத்தான்குடி பிரதான வீதியின் அபிவிருத்தி வேலைகள் பூர்த்தியடையூம் நிலையில் உள்ளது. சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அயராத முயற்சியினால் காத்தான்குடி பிரதான வீதி இருபக்க வீதியாக பிரிக்கப்பட்டு நடுவில் பேரீத்தமரங்கள் நடப்பட்டுள்ளதுடன் மின்கம்பங்களில் மின்குமிழ்களும் பொறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு நடப்பட்டுள்ள 69 பேரீத்தமரங்களுக்கும் வர்ண அலங்கார மின்விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளதுடன் 50 மின்கம்பங்களிலும் இருபக்கமும் மின்குமிழ்கள் பொறுத்தப்பட்டு காட்சியளிக்கின்றது.
Filed under: காத்தான்குடி செய்திகள்