கடல் அரக்கன் தனது நெடிதுயர்ந்த கைகளால் சுனாமி வலையை மூச்சுப் பிடித்து ஒரே வீச்சாக வீசினான். கரையிலிருந்து சில நூறு மீட்டருக்கு உட்பட்ட பிரதேசத்தினுள் அமைந்திருந்த கட்டடங்கள், பொருட்கள், உயிர் வாழ் சீவராசிகள் என பேதம் பாராது சகலவற்றையும் அள்ளிக் கொண்டு வலையை உள்ளிழுத் தான்.
வலையைப் பிரித்து உள் அகப்பட்டவைகளைத் துப்புரவு செய்த பின்னர் மீண்டுமொரு தடவை கொசுவிய வலையை ஆகாயத்தை நோக்கி வீச, முன்னையது காரணமாக தப்பிப் பிழைத்து ஓடி உயிரைக் காப்பாற்றிக்கொண்டவைகள் போக மற்றெல்லாவற்றையும் பொறுக்கிக்கொண்டு அன்றைய பாடு அத்துடன் போதுமென இல்லமேகினான்.
பெற்றோரை இழந்த பிள்கைள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், தாலிக்கொடிகள் அறுத்தெரியப்பட்ட மனைவிகள், தாரமிழந்த கணவன் கள் என பார்க்குமிடங்களிலெல்லாம் ஒப்பாரி மயம். சுனாமி அரக்கன் ஏற்படுத்திய அட்டகாசங்களிலிருந்து மீள் எழுவதற்கு பாதிக்கப்பட்டோர் எதிர் நோக்கிய துன்ப துயரங்கள் ஏராளம். […]
Filed under: சிறுகதைகள், செய்திகள்